பாபாவின் உதி (விபூதி) மிகவும் உயர்ந்ததும், புனிதமானதும் ஆகும். இந்த உதியின் லீலைகள் மிகவும் விசித்திரமானதும் ஆகும். விரும்பியதை எல்லாம் கொடுக்கவல்ல இந்த உதி உடல் மற்றும் மன நோய்களைத் தீர்க்கவல்லது.

நாம் செய்யும் துனி பூஜை நவக்கிரக ஹோமத்திற்குச் சமமானது.

சாயி பிருந்தாவனத்தில் விளக்கு ஏற்றுவதற்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாபாவிற்கு விளக்கு ஏற்றி வைத்து, ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு, நவதானியங்கள், மட்டைத் தேங்காய், சாம்பிராணி, நெய், சமித்து இவை அனைத்தையும் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவை நினைத்து துனியைச் சுற்றி வந்து நெருப்பில் இட வேண்டும்.

துனி பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கோயிலில் உள்ள சாயி அங்காடியில் கிடைக்கும்.

விலை: ₹60/- (ரூபாய் அறுபது)

துனி பூஜை பற்றி தெரிந்துகொள்ள கோயில் பணியாளர்களை அணுகவும்.

- கோயில் நிர்வாகம்

தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

சர்வ ஜீவன்களிலும் அப்பரமனே உள்ளான் என்று யார் அறிந்து நடந்து கொள்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களை இறைவன் தவறாமல் காத்தருள்வார். இந்த சிருஷ்டிக்கு, மூலம் அந்த பரமாத்மனே. சர்வ ஜீவன்களுக்கும் தாயும் தந்தையும் அவரே.

- ஷீரடி சாயி பாபா